Thursday 1 September 2011


குருவை,சம்பா,தாளடி
என்றன மாறி
ஒருபோகமே ஒசத்தி
என்றாயினும்,
வீடு வருவது
என்னவோ
வெறுங்கையோடுதான்
விவசாயி.

என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்,எழுத்துக்களால் அறிமுகமாகிய புதிய வலைபூ நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 
2.இலவசம்
நிர்வாணபடுத்தபடுகிறேன்
பராவயில்லை எனக்கு
இலவசமாக கோவனம்
கிடைத்ததே.

எங்கிருந்தோ எடுக்கபடவில்லை
என்னிடத்தில் எடுக்கப்பட்டது
எனக்கே இலவசமாக
அறிமுகபடுத்தபடுகிறது.

யாசிக்க மட்டும் பழக்கபடுத்தபட்ட
எனக்கு திறன் யோசிக்க மாத்திரம்
எங்கிருந்துவரும்.

பங்கிட்டபின் தெரிக்கும்
எச்சங்கள்-என் மீதும்
பட்டு தெரித்தன சில
இலவசங்களாய்
 
3.ஈழம்
என் தேசத்துள் என்னோடு
பயணிக்கின்ற என் சக தேசிய
இனங்களே - ஒற்றை கேள்வி,
உங்களில் எந்த இனத்திற்கு
எதிரானவன் என் ஈழ தமிழன்.

எனையாழ்கின்ர என்னவர்களே
கூறுங்கள் எதைஇழந்து என்னவனை
காக்கபோகிறோம்,
வேண்டாம் இன்னொரு ஈழம்
என் தேசத்துள்,
தலைவாழ்ளில்லா தேசமாய்
என் பாரத மாத வாழமாட்டாள்.

படித்ததுண்டு,கேட்டதுண்டு என்
குல பெருமைதனை வேர்றவன்
என்னையாண்ட கதையினை தவிர.

சேர,சோழ,பாண்டிய வம்சம்
தமிழானாய் தனித்து இருந்ததால் தான்
கண்ணகிக்கு கோயிலும், காவேரி நீரும்
இன்னும் பெருமைகொள்ள ஏராளம்.

ஒரு வரலாறு என்னோடு வாழ்ந்த
அனுபவம் - சக தோழனை போல்
மாவிரனின் மரணம் - எல்லா
குடியிலும் ஈழத்திற்கு ஆள்
கேட்டான் அழ ஆளில்லை அவன் குடியில் ,
காகிதத்தில் எழுத படவில்லை - உன்
வரலாற்று அழித்துவிட - நாளை
என் சந்ததிக்கு சொல்வேன்
வாய் மொழியாக ,கதையாக, கவிதையாக
வேலுபிள்ளை பிரபாகரன் என்றொரு
வீர வரலாறு

 
4.ஆத்மா,
ஆம்
இறந்த பின்னும்
வாழ்கிறான் - ஏழை
இந்தியன்

நிறைவேறா
ஆசைகளுடன்
 
5.மக்கள் ஆட்சி.
வாக்கு சாவடியை
வேகமாக வெளியேறினான்

இனாமாய் கிடைத்த ரூபாயில்
"மக்கள் ஆட்சி'யை பார்க்க.

 

6.வான் பொய்தபோதும்
வயல் கொண்ட நீர்
வற்றிடா போதும்,
நித்தம் கலனி கண்டு
கிட்டிய கால் பங்கும்
உலக ஒட்டதின் ஒவ்வா
பயனாய் ஆன போதும்,
செய்திடுவோம் தீதுயின்றி
உலகம் உய்ய..


ன் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 
வாழிthamil naaduய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

No comments:

Post a Comment