Thursday 1 September 2011

tamil kavithai 2


காவியுடை கதைகள் பல
கேட்டும்,படித்தும்,இப்போது
பார்த்தும்.

இருந்தாலென்ன...
அவமானப்படப்போவது
அடையாளப்படுத்தப்பட்ட
நாமல்லவா.

தினங்கள் மாறும்,
மற்றொருவர் வருவார்
அருள்பாவிப்பார்
கண்டேன் கடவுளை என்று
ஆராதிப்போம்.
பாவம் செய்ய பல வழிகள்,
சேர்த்துகொள்ளுங்கள் அதோடு
காவியுடையையும்.

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்
இயல்பாய் ஏற்றாகிவிட்டது,

உறைக்கின்ற உண்மைகள்
நடுகல்லாய் நட்டுருக்க,
தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.

No comments:

Post a Comment